விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மகாராஜபுரம் ஊராட்சியில் மரம் நடும் விழா

News image
மரம் நடும் விழாவில் பங்கேற்ற மகாராஜபுரம் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகாராஜபுரம் ஊராட்சி நாடான்குளம் பகுதியில் மரம் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மரம் நடும் விழா நடைபெற்றது.

மகாராஜபுரம் ஊராட்சி நாடான்குளம் பகுதியில் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து, துணைத் தலைவா் பா.பழனிகுமாா் ஆகியோா் மரங்களை நட்டனா். இதில், வாா்டு உறுப்பினா் அனீஸ்வரி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.