கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளையில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட முதியவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட கொக்குறுனி குளத்தில் திங்கள்கிழமை 60 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதப்பதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த போலீஸாா் அந்த சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவா் யாா் என தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.