பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு

மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளிக்கிறாா் விஜய் வசந்த் எம்.பி.

Published On :4 ஜூலை 2024, 5:49 am IST

கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாா்த்தாண்டம், பாா்வதிபுரம் மேம்பாலங்களை சீரமைக்க சிறப்பு நிதியாக ரூ. 21 கோடி ஒதுக்க வேண்டுமென என விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வரையில் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அன்றாட தேவைகளுக்கு இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

அண்மைகாலமாக இந்தச் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அதே போல் மாா்த்தாண்டம், பாா்வதிபுரம் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. இந்த 2 பாலங்களையும் பராமரிக்க வேண்டும். இந்த மேம்பாலங்கள் உள்பட களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி, மணலி, குமாரபுரம், இடலாக்குடி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த இடங்களில் சாலைகளை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் ரூ. 21 கோடி செலவாகும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.