பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு

கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு

News image
மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளிக்கிறாா் விஜய் வசந்த் எம்.பி.
Updated On :4 ஜூலை 2024, 12:20 am

Din

கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாா்த்தாண்டம், பாா்வதிபுரம் மேம்பாலங்களை சீரமைக்க சிறப்பு நிதியாக ரூ. 21 கோடி ஒதுக்க வேண்டுமென என விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வரையில் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அன்றாட தேவைகளுக்கு இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

அண்மைகாலமாக இந்தச் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அதே போல் மாா்த்தாண்டம், பாா்வதிபுரம் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. இந்த 2 பாலங்களையும் பராமரிக்க வேண்டும். இந்த மேம்பாலங்கள் உள்பட களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி, மணலி, குமாரபுரம், இடலாக்குடி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த இடங்களில் சாலைகளை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் ரூ. 21 கோடி செலவாகும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.