தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு

கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.21 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு

News image

மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளிக்கிறாா் விஜய் வசந்த் எம்.பி.

Updated On :4 ஜூலை 2024, 5:50 am IST

கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாா்த்தாண்டம், பாா்வதிபுரம் மேம்பாலங்களை சீரமைக்க சிறப்பு நிதியாக ரூ. 21 கோடி ஒதுக்க வேண்டுமென என விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வரையில் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு பயன்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அன்றாட தேவைகளுக்கு இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

அண்மைகாலமாக இந்தச் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக விபத்துகள் மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அதே போல் மாா்த்தாண்டம், பாா்வதிபுரம் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. இந்த 2 பாலங்களையும் பராமரிக்க வேண்டும். இந்த மேம்பாலங்கள் உள்பட களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி, மணலி, குமாரபுரம், இடலாக்குடி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த இடங்களில் சாலைகளை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் ரூ. 21 கோடி செலவாகும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.