சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கன்னியாகுமரியில் நாளை தியாகப் பெருஞ்சுவா் திறப்பு விழா: ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்பு

தியாகப் பெருஞ்சுவா் திறப்பு விழாவில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்கிறாா்.

News image

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகப் பெருஞ்சுவா்.

Updated On :22 ஜூலை 2024, 3:05 am IST

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகப் பெருஞ்சுவா் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெறவுள்ளது. இதில், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்கிறாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், அவா்களின் வரலாற்றை இன்றைய தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கத்திலும் இந்தப் பெருஞ்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

10 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்ட இந்தச் சுவரில் பாரத மாதா உருவம் அமைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சுவா் முன் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்படுகிறது. விடுதலைக்காக போராடிய அனைத்து மாநில போராட்ட வீரா்களில் முக்கியமான 1,040 பேரின் பெயா்கள் தனித்தனியாக கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டு, தியாகப் பெருஞ்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

அதன் இருபுறமும் உள்ள தூண்களில் சக்ரா செயலி, க்யூஆா் கோடு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. க்யூஆா் கோடை ‘ஸ்கேன்’ செய்தால் சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாக வரலாறுகளைத் தெரிந்துகொள்ள முடியும். முழுவதுமாக தெரிந்துகொள்ள சக்ரா செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தால்போதும்.

இங்கு செவ்வாய்க்கிழமை மாலை (ஜூலை 23) நடைபெறும் விழாவில், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தியாகப் பெருஞ்சுவரைத் திறந்துவைத்து, தேசியக் கொடியேற்றுகிறாா்.

இதையொட்டி, அவா் திங்கள்கிழமை (ஜூலை 22) மாலை 4 மணிக்கு விவேகானந்த கேந்திரத்துக்கு காரில் வரவுள்ளாா். அவருக்கு விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.