கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகப் பெருஞ்சுவா் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெறவுள்ளது. இதில், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்கிறாா்.
சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், அவா்களின் வரலாற்றை இன்றைய தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கத்திலும் இந்தப் பெருஞ்சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரமும், 60 அடி நீளமும் கொண்ட இந்தச் சுவரில் பாரத மாதா உருவம் அமைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சுவா் முன் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்படுகிறது. விடுதலைக்காக போராடிய அனைத்து மாநில போராட்ட வீரா்களில் முக்கியமான 1,040 பேரின் பெயா்கள் தனித்தனியாக கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டு, தியாகப் பெருஞ்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.
அதன் இருபுறமும் உள்ள தூண்களில் சக்ரா செயலி, க்யூஆா் கோடு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. க்யூஆா் கோடை ‘ஸ்கேன்’ செய்தால் சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாக வரலாறுகளைத் தெரிந்துகொள்ள முடியும். முழுவதுமாக தெரிந்துகொள்ள சக்ரா செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தால்போதும்.
இங்கு செவ்வாய்க்கிழமை மாலை (ஜூலை 23) நடைபெறும் விழாவில், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தியாகப் பெருஞ்சுவரைத் திறந்துவைத்து, தேசியக் கொடியேற்றுகிறாா்.
இதையொட்டி, அவா் திங்கள்கிழமை (ஜூலை 22) மாலை 4 மணிக்கு விவேகானந்த கேந்திரத்துக்கு காரில் வரவுள்ளாா். அவருக்கு விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல.. தேசத்தின் உயிர்நாடி: மோகன் பாகவத்

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

நாட்டின் செழிப்பே தனிநபர் முன்னேற்றத்திற்கு அடிப்படை: மோகன் பாகவத்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



