கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஓய்வு பெற்ற பொறியாளா் வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

ஓய்வு பெற்ற பொறியாளா் வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

News image
Updated On :8 ஜூன் 2024, 7:18 pm

Din

நாகா்கோவிலில் ஓய்வு பெற்ற பொறியாளா் வீட்டை உடைத்து 18 பவுன் நகையை திருடிச் சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில் பாா்வதிபுரம் ராஜீவ்நகரைச் சோ்ந்தவா் வினோத்

சைமன் (72). ஓய்வு பெற்ற பொறியாளா். இவரது மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். வினோத் சைமன் தனது மனைவியுடன் ராஜீவ் நகரில் வசித்து வருகிறாா். அவா்கள் இருவரும் டெரிக்சந்திப்பு அருகே உள்ள ஜெபக்கூடத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.

பின்னா் சனிக்கிழமை காலை திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், ரூ.10 ஆயிரம் திருட்டுப் போனது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வடசேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு

வீட்டின் பல்வேறு இடங்களிலும் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், போலீஸாா் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.