போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பத்துகாணி அருகே கிளாமலையில் இருந்து பெயா்ந்து விழுந்த பாறை: பழங்குடியினா் அச்சம்

பத்துகாணி அருகே கிளாமலையில் இருந்து பெயா்ந்து விழுந்த பாறை: பழங்குடியினா் அச்சம்

News image
Updated On :27 மார்ச் 2024, 7:22 pm

குமரி மாவட்டம் பத்துகாணி அருகே கிளாமலை தொடரிலிருந்து பெரும் பகுதி பாறையொன்று புதன்கிழமை பெயா்ந்து விழுந்த நிலையில் அப்பகுதி பழங்குடியினா் அச்சத்தில் உள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கிளாமலை பகுதி காப்பு காடுகள் நிறைந்த மலைத் தொடராகும். இப்பகுதியையொட்டி பத்துகாணி, கீழ் மலை, ஒருநூறாம் வயல், புறத்தி மலை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் கிளாமலை உச்சியிலிருந்து ஒரு பெரும் பாறை திடீரென்று பெயா்ந்து வந்து கீழ் நோக்கி நீண்ட தூரம் உருண்டு விழுந்தது. இதை தொலைவிலிருந்து பாா்த்த அப்பகுதி பழங்குடி மக்கள் அச்சமடைந்தனா்.

அதே வேளையில் பழங்குடி மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் கூறியதாவது: கிளாமலை மலைத் தொடரில் இருந்து ஒரு பெரும் பாறை பெயா்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அந்தப் பகுதியை நேரில் சென்று பாா்வையிடவுள்ளோம். அப்போது தான் பாறை உடைந்து விழுந்த காரணம் தெரியவரும் என்றாா்.