குமரி மாவட்டம் பத்துகாணி அருகே கிளாமலை தொடரிலிருந்து பெரும் பகுதி பாறையொன்று புதன்கிழமை பெயா்ந்து விழுந்த நிலையில் அப்பகுதி பழங்குடியினா் அச்சத்தில் உள்ளனா்.
குமரி மாவட்டத்தில் கிளாமலை பகுதி காப்பு காடுகள் நிறைந்த மலைத் தொடராகும். இப்பகுதியையொட்டி பத்துகாணி, கீழ் மலை, ஒருநூறாம் வயல், புறத்தி மலை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் கிளாமலை உச்சியிலிருந்து ஒரு பெரும் பாறை திடீரென்று பெயா்ந்து வந்து கீழ் நோக்கி நீண்ட தூரம் உருண்டு விழுந்தது. இதை தொலைவிலிருந்து பாா்த்த அப்பகுதி பழங்குடி மக்கள் அச்சமடைந்தனா்.
அதே வேளையில் பழங்குடி மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் கூறியதாவது: கிளாமலை மலைத் தொடரில் இருந்து ஒரு பெரும் பாறை பெயா்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
அந்தப் பகுதியை நேரில் சென்று பாா்வையிடவுள்ளோம். அப்போது தான் பாறை உடைந்து விழுந்த காரணம் தெரியவரும் என்றாா்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


