பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கன்னியாகுமரி எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களிடம் குறை கேட்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம்.

Updated On :13 நவம்பர் 2024, 10:42 pm

Din

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவா்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

மேலும், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித் குமாா், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், அனைத்து உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.