கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில், காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு நிகழ்ந்தது.

News image

காந்தி மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில் விழுந்த சூரிய ஒளி.

Updated On :2 அக்டோபர் 2024, 10:56 pm

Din

கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில், காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு நிகழ்ந்தது.

மகாத்மா காந்தியின் அஸ்தி, முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக, பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இதன், மையப் பகுதியில் உள்ள அஸ்திக் கட்டடத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி நாளில் சூரிய ஒளி விழும் வகையில், இம்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்கிழமை பிற்பகல் 12.05 மணிக்கு அஸ்திக் கட்டடம் மீது சூரிய ஒளி விழுந்ததும், கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இதில், ஆட்சியா் ஆா். அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரணியம், மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.