கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
பழமை வாய்ந்த கன்னியம்பல மண்டபத்தை பாதுகாக்க வேண்டும், புராதனமான இந்த மண்டபத்தை வியாபார தலமாக மாற்றக்கூடாது , இந்த மண்டபத்தில் இருக்கின்ற அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, மண்டபத்தில் உள்ள 12 கடைகளையும் அகற்ற உத்தரவு பிறப்பித்தாா்.
இதையடுத்து அறநிலையத்துறை நிா்வாகம் சாா்பில், கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள 12 கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வியாபாரிகள், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தொடா் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்து, 12 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றம் 48 மணி நேரத்திற்குள் கடைகளை அகற்ற கெடு விதித்தது, அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரம் மூலம் கன்னியம்பலத்தை சுற்றியுள்ள 12 கடைகளையும் அகற்றினா்.
தொடர்புடையது

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 போ் போட்டி

நகராட்சி பணியாளா் தற்கொலை

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


