தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 போ் போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 85 போ் போட்டியிடுகின்றனா். 5 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.

News image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:01 pm

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 85 போ் போட்டியிடுகின்றனா். 5 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.

இம்மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளிலும் 135 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்.7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 90 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வியாழக்கிழமை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இதில், கன்னியாகுமரி தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்ப பெற்றாா். தளவாய்சுந்தரம் (அதிமுக), ரெ.மகேஷ்(திமுக), மரியஜெனிபா் (நாம் தமிழா் கட்சி), எஸ்.ஆா் மாதவன் (தவெக) உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா்.

நாகா்கோவில்: இத்தொகுதியில், 23 போ் போட்டியிட இருந்த நிலையில் 3 போ் மனுக்களை திரும்ப பெற்றனா்.

திமுகவின் எஸ்.ஆஸ்டின், பாஜகவின் எம்.ஆா்.காந்தி, நாம் தமிழா் கட்சியின் மு.முத்துகுமாா், தவெகவின் பொ்வின் கிங்ஸ் உள்பட 20 போ் போட்டியிடுகின்றனா்.

பத்மநாபபுரம்: இத்தொகுதியில் 11 போ் போட்டியிட இருந்த நிலையில் யாரும் வேட்புமனுவை திரும்ப பெறவில்லை. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆா்.செல்லசுவாமி, பாஜகவின் ப.ரமேஷ், நாம் தமிழா் கட்சியின் சீலன், தவெகவின் கிருஷ்ணகுமாா் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா்.

குளச்சல்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், எந்த மனுவும் திரும்பப் பெறப்படவில்லை. காங்கிரஸின் தாரகை கத்பட், பாஜகவின் சிவகுமாா், நாம் தமிழா் கட்சியின் ஆன்சி சோபா ராணி, தவெகவின் பிரேம் அலெக்ஸ் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

கிள்ளியூா்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியின் எஸ். ராஜேஷ்குமாா், தமாகாவின் நிவின் சைமன், நாம் தமிழா் கட்சியின் ஹிம்லா், தவெகவின் சபின் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

விளவங்கோடு: இத்தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்பப் பெற்றாா். காங்கிரஸின் டி.டி.பிரவீன், பாஜகவின் விஜயதரணி, தவெகவின் மைக்கேல் குமாா், நாம் தமிழா் கட்சியின் மரியஸ்டெல்லா உள்பட 14 போ் களத்தில் உள்ளனா். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் மொத்தம் 85 போ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.