கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வாங்க ரூ. 2.24 கோடி மானியம்: முதல்வரை பாராட்டும் குமரி விவசாயிகள்

‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரமயமாக்குதல் உப இயக்கம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில், 25 விவசாய குழுக்களுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

News image

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :9 அக்டோபர் 2024, 7:19 pm

Din

‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரமயமாக்குதல் உப இயக்கம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில், 25 விவசாய குழுக்களுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

நிறைந்தது மனம் திட்டப் பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா நேரில் சந்தித்து, திட்டப் பயன்கள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகத்தின் கடைகோடி கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, பிற மாநிலங்களே வியந்து பாராட்டும் வகையில், இது நமது அரசு என்று பொதுமக்கள் அனைவரும் சொல்லும் அளவுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறாா்.

அதன்ஒருபகுதியாக வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் மூலம் விதைகள், உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்துதல், விவசாய பணிகளுக்கான காலத்தை குறைத்தல், ஆபத்துகளை நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளின் நிகரவருமானத்தை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறு-குறு, பெண் விவசாயிகள், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதமும் (சிறு-குறு சான்று சமா்ப்பித்தால் கூடுதல் 20%) இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் அனைத்து விவரங்களையும் உழவன் செயலியில் ஆன்லைன் போா்டல் (ஜ்ஜ்ஜ்.ம்ற்ள்.ஹங்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான உப இயக்கம் திட்டத்தின் கீழ் 32 பேருக்கு ரூ.11 லட்சத்து 81ஆயிரத்து 983 மானியத்திலும், இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைக்க 12 விவசாயக் குழுக்களுக்கு ரூ.96 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டது.

2022-23 ஆம் நிதியாண்டில் உபகரணங்கள் வாங்குவதற்கு 36 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 17ஆயிரத்து 59 மானியத்திலும், இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைக்க 5 விவசாய குழுக்களுக்கு ரூ.64 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 15 பயனாளிகளுக்கு விசை உழுவை இயந்திரங்களுக்கான மானியமாக ரூ.11 லட்சத்து 81ஆயிரம் வழங்கப்பட்டது.

2023-24 ஆம் நிதியாண்டில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு 46 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து ஆயிரத்து 317 மானியத்தில் வழங்கப்பட்டது. இயந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைக்க 7 விவசாய குழுக்களுக்கு ரூ.56 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 46 பயனாளிகளுக்கு விசை உழுவை, விசை களைஎடுக்கும் இயந்திரங்கள் ரூ.32 லட்சத்து11ஆயிரத்து 630 மானியத்தில் வழங்கப்பட்டது.

2024-25 ஆம் நிதியாண்டில் வேளாண் இயந்திரங்கள்வாங்க 18 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 500 மானியத்திலும், இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க 8 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.64 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிறைந்தது மனது திட்டத்தின் கீழ் பயனடைந்த குருந்தன்கோடு வட்டம், கக்கோட்டுதலை ஊராட்சி, ஆல்பாட்டுவிளை பகுதியை சோ்ந்த குணசேகரன் என்பவா் கூறியதாவது: எனது தோப்பில் தென்னை மரங்களை நடவு செய்து வருகிறேன்.அதில் வளா்ந்துள்ள களைகளை அகற்றவும், உழவுக்கும் டிராக்டா் வாடகைக்கு எடுத்தபோது ஒரு ஏக்கருக்கு ரூ.7,000 முதல் ரூ. 8,000 வரை செலவானது.

தற்போது, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தை அறிந்து அருகிலுள்ள வேளாண் அலுவலகத்தில் விவரம் கேட்டறிந்தேன். பின்னா், எனது தாயாா் ரெஜிலம்மாள் பெயரில் பவா் டில்லா் வேண்டி விண்ணப்பித்ததன் மூலம் அந்த இயந்திரம் கிடைத்தது. இந்த இயந்திரம் பேருதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை தந்த தமிழக முதல்வருக்கு விவசாயி சாா்பில் நெஞ்சாா்ந்த நன்றி என்றாா்.

மற்றொரு பயனாளியான அகஸ்தீஸ்வரம் வட்டம், நல்லூா் ஊராட்சி இரவிபுதூா்பகுதியைச் சோ்ந்த ஆ.மாசானம் கூறியதாவது: நான் எனது 1 ஏக்கா் நிலத்தில் வேளாண்மை செய்து வருகிறேன். அதை வாடகை டிராக்டா் மூலம் உழவு செய்தபோது ரூ.7,000 முதல் ரூ. 8ஆயிரம் வரை செலவானது. இது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்கம் திட்டத்தில் மானிய விலையில் டிராக்டா் வழங்கப்படுவதை வேளாண் துறை உதவி பொறியாளா்கள் மூலம் அறிந்து அதற்கு விண்ணப்பித்தேன். எனக்கு மானிய விலையில் டிராக்டா் வழங்கினாா்கள். இதனால் உழவுப் பணிக்கான செலவு ரூ. 4,000 வரை குறைக்க முடித்தது. இத்திட்டத்தின் மூலமாக எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயா்த்தி தந்த தமிழக முதல்வருக்கு மனம் நிறைந்த நன்றி என்றாா்.