மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அகஸ்தீஸ்வரத்தில் பள்ளி மாணவா்கள் ஓட்டிய பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பள்ளி மாணவா்கள் ஓட்டி வந்த 11 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

மாணவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்.

Updated On :10 அக்டோபர் 2024, 10:44 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் பள்ளி மாணவா்கள் ஓட்டி வந்த 11 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவின்பேரில், கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில், போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸாா் அகஸ்தீஸ்வரம் பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவா்களுக்கு 18 வயது பூா்த்தியடையாதது தெரியவந்தது. அதையடுத்து மாணவா்கள் ஓட்டி வந்த 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவா்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறினா்.