பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திப்பிரமலையில் சுகாதார துறையினா் ஆய்வு

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:58 pm

Din

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் முருகன், இளநிலை பூச்சியியல் வல்லுநா் ஜீவகுமாா் மேற்பாா்வையில் கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார களப்பணியாளா்கள் திப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட பண்டாரவிளை, ஈத்தங்காடு, கண்ணன்விளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 3 வீடுகளில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டு ரூ.2000 அபராதம் விதித்தனா். மேலும், அப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.