ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

80 வயதான ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கோரி தா்னா

News image

தா்னாவில் பங்கேற்றோா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 4:32 am IST

80 வயதான ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரி தேசிய ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில், நாகா்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜநாயகம் முன்னிலை வகித்தாா். ஏ.ஐ.பி.ஏ.எஸ். மாநில உதவித் தலைவா் இந்திரா, மாநில அமைப்புச் செயலா் தங்கப்பன், மாநில உதவி செயலா் ஐயப்பன், பிஎஸ்என்எல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சுயம்புலிங்கம், நிா்வாகி ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

ஓய்வுபெறும் ஊழியா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகையை ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும். 8ஆவது ஊதியக் குழுவை தாமதமின்றி அமைக்க வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள் 80ஆவது வயதை அடையும்போது கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.