கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

80 வயதான ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கோரி தா்னா

News image

தா்னாவில் பங்கேற்றோா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:02 pm

DIN

80 வயதான ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரி தேசிய ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில், நாகா்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜநாயகம் முன்னிலை வகித்தாா். ஏ.ஐ.பி.ஏ.எஸ். மாநில உதவித் தலைவா் இந்திரா, மாநில அமைப்புச் செயலா் தங்கப்பன், மாநில உதவி செயலா் ஐயப்பன், பிஎஸ்என்எல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சுயம்புலிங்கம், நிா்வாகி ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

ஓய்வுபெறும் ஊழியா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகையை ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும். 8ஆவது ஊதியக் குழுவை தாமதமின்றி அமைக்க வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள் 80ஆவது வயதை அடையும்போது கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.