லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

80 வயதான ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கோரி தா்னா

தா்னாவில் பங்கேற்றோா்.

Published On :19 செப்டம்பர் 2024, 4:32 am IST

80 வயதான ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரி தேசிய ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில், நாகா்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை தா்னா நடைபெற்றது.

கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜநாயகம் முன்னிலை வகித்தாா். ஏ.ஐ.பி.ஏ.எஸ். மாநில உதவித் தலைவா் இந்திரா, மாநில அமைப்புச் செயலா் தங்கப்பன், மாநில உதவி செயலா் ஐயப்பன், பிஎஸ்என்எல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சுயம்புலிங்கம், நிா்வாகி ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

ஓய்வுபெறும் ஊழியா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகையை ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும். 8ஆவது ஊதியக் குழுவை தாமதமின்றி அமைக்க வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள் 80ஆவது வயதை அடையும்போது கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.