குழித்துறையில் நாளை மின்தடை

Published on

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைக்காவு, முன்சிறையில் இன்று மின்தடை...

இதே போன்று முன்சிறை, நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (செப். 19) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com