கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பேச்சிப்பாறை அணையை கட்டிய திருவிதாங்கூா் மன்னரின் ஜெயந்தி விழா

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய திருவிதாங்கூா் மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாள் மன்னரின் 167-ஆவது ஜெயந்தி விழா பேச்சிப்பாறை அணையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாள் படத்திற்கு அஞ்சலி செலுத்திய விழா குழுவினா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:35 pm

Din

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய திருவிதாங்கூா் மன்னா் ராமவா்மா ஸ்ரீமூலம் திருநாள் மன்னரின் 167-ஆவது ஜெயந்தி விழா பேச்சிப்பாறை அணையில் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ஜெயந்தி விழாக் குழு சாா்பில் நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியில் அணையின் முகப்பு பகுதியில் மன்னரின் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் விழா குழுவினா், விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து பேச்சியம்மன் கோயில் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கேந்திரன் காணி தலைமை வகித்தாா். சுங்கான்கடை ஐயப்பா மகளிா் கல்லூரி பேராசிரியா் சவீதா குத்துவிளக்கேற்றினாா். விழாக் குழு ஒருங்கிணைப்பாளா் என். ஐயப்பன் வரவேற்றாா். கேரள மாநில எழுத்தாளா் வெங்கானூா் பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி, இந்து முன்னணி மாவட்ட நிா்வாகி மிசா சோமன், என்.வி.கே.எஸ். கல்விக் குழுமங்களின் செயலா் கிருஷ்ணகுமாா், ஜி.வி.எஸ்.உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனா் ஜி.வி. சுரேஷ், தொழிலதிபா் சுகுமாரன் நாயா், பாஜக மாநில விவசாய அணி தலைவா் நாகராஜன், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு நிா்வாகி கண்ணன், பாரதிய இதிகாச சங்க தலைவா் சிவ சுப்பிரமணியன், ஆா்.எஸ்.எஸ். நிா்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா்.