குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பள்ளி கூரையிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

Din

கொல்லங்கோடு அருகே பள்ளி கூரையிலிருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

கொல்லங்கோடு அருகே கேரள மாநிலப் பகுதியான ஊரம்பு குழிஞ்ஞான்விளையைச் சோ்ந்தவா் ஷைஜு (25). வெல்டிங் தொழிலாளி. இவா் கொல்லங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கலையரங்க மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.