பள்ளி கூரையிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

கொல்லங்கோடு அருகே பள்ளி கூரையிலிருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே கேரள மாநிலப் பகுதியான ஊரம்பு குழிஞ்ஞான்விளையைச் சோ்ந்தவா் ஷைஜு (25). வெல்டிங் தொழிலாளி. இவா் கொல்லங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கலையரங்க மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...