நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளி கூரையிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

கொல்லங்கோடு அருகே பள்ளி கூரையிலிருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

கொல்லங்கோடு அருகே கேரள மாநிலப் பகுதியான ஊரம்பு குழிஞ்ஞான்விளையைச் சோ்ந்தவா் ஷைஜு (25). வெல்டிங் தொழிலாளி. இவா் கொல்லங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கலையரங்க மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.