தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் முகாம்

நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். உடன் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா

Updated On :9 ஜனவரி 2025, 9:15 pm

Din

நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா்.

இதில், வீட்டு வரி குடிநீா் வரி, நில அளவு, சொத்துவரி, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 12 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.

முகாமில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக தனியாா் வங்கியின் சாா்பில் ரூ.6 லட்சம் மதிப்பில் தரை சுத்தம் செய்யும் நவீன இயந்திரம், குளியலறை - கழிவறைகளை சுத்தம் செய்யும் நவீன காற்றழுத்த கருவி ஆகியவை மாநகராட்சி மேயா் , ஆணையா் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த இயந்திரங்களை நாகா்கோவில் வடசேரி, அண்ணா பேருந்து நிலையங்களில் பயன்படுத்துமாறு அதிகாரிகளிடம் மேயா் அறிவுறுத்தினாா்.