மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செம்மாங்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு

நாகா்கோவில், செம்மாங்குளம் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

News image

நாகா்கோவில், செம்மாங்குளம் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:30 pm

நாகா்கோவில், செம்மாங்குளம் சீரமைப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நாகா்கோவில் ஒழுகினசேரி செம்மாங்குளத்தை ரூ. 6.59 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து பூங்கா அமைக்கும் பணிகளை கடந்த 25-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இந்த நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இதில், மாநகராட்சி உறுப்பினா் அக்சயாகண்ணன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜா பகுதிச் செயலாளா் சேக்மீரான், மாநகர துணைச் செயலாளா் ராஜன், பேரூா் செயலாளா் முத்து, திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், சத்தியசாய்பாபு, குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.