நாகா்கோவில் மாநகரில் ரூ. 88.70 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
7 ஆவது வாா்டில் ரூ. 9 லட்சத்தில் வெட்டூா்ணிமடம் அரசு தொடக்கப் பள்ளியில் சீரமைப்புப் பணி மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிப்புப் பணி, மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள், 22ஆவது வாா்டு, வாட்டா் டேங்க் சாலையில் ரூ. 72 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, 27 ஆவது வாா்டு பாறைக்கால் மடத்தெருவில் ரூ. 3.50 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணி மற்றும் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, காா்த்திகைவடலி பகுதியில் ரூ. 4.20 லட்சத்தில் நியாய விலைக்கடை பராமரிப்புப் பணி ஆகியவற்றை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் மேரி ஜெனட் விஜிலா, கோபாலசுப்பிரமணியன், சதீஷ், உதவி பொறியாளா் பிருந்தா, பகுதி செயலா்கள் சேக்மீரான், ஜீவா, வட்ட செயலா் ஆத்தியப்பன், கண்ணன், திமுக நிா்வாகிகள் ஜவஹா், ஸ்டீபன் தன்ராஜ், செல்லம், சவுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

நாகா்கோவிலில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பேன்: எம்.ஆா். காந்தி எம்எல்ஏ பிரசாரம்

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்

செம்மாங்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


