பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நாகா்கோவில் மேயா் ராஜிநாமா

நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image

மகேஷ்

dinamani

Updated On :2 ஏப்ரல் 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த ரெ.மகேஷ் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக ரெ.மகேஷ் தோ்வு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இவா், வரும் பேரவைத் தோ்தலில், திமுக சாா்பில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக போட்டியிட திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் தனது மேயா் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை கடிதம் அளித்தாா்.