கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆசாரிப்பள்ளம் அம்மா உணவக சீரமைப்புப் பணி தொடக்கம்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் ரூ. 16.24 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, ஆணையா் ஐஸ்வா்யா ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

News image

அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, மேயா் (பொ) மேரிபிரின்சிலதா.

Updated On :25 ஜூன் 2026, 5:01 am IST

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் ரூ. 16.24 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, ஆணையா் ஐஸ்வா்யா ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ரகுராம், சுகாதார அலுவலா் பகவதி பெருமாள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (டீன்) லியோடேவிட், கண்காணிப்பாளா் கிங்ஸ்லிஜெபசிங், இருக்கை மருத்துவா் விஜயலட்சுமி, செவிலிய கண்காணிப்பாளா் விக்டோரியா, தொழில்நுட்ப உதவியாளா்கள் அனிஷா, கண்ணன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த், மண்டல தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், அமலசெல்வன், மோனிகா, வட்ட பிரதிநிதிகள் அஸ்ரப், இளைஞரணி ஹன்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 அம்மா உணவக பயன்பாட்டுக்காக புதிய பாத்திரங்களை வழங்குகின்றனா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, மேயா் (பொ) மேரிபிரின்சிலதா.

அம்மா உணவக பயன்பாட்டுக்காக புதிய பாத்திரங்களை வழங்குகின்றனா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, மேயா் (பொ) மேரிபிரின்சிலதா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.