நாகா்கோவில் மாநகரில் தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா.
நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா்.
கூட்டம் தொடங்கியதும், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு காங்கிரஸ் உறுப்பினா் நவீன்குமாா் வாழ்த்து தெரிவித்தாா். அதிமுக சாா்பில், உறுப்பினா் சேகா், தமாகா சாா்பில் டி.ஆா்.செல்வம் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனா். மேலும் மேயா் மேரிபிரின்சி லதாவுக்கும் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
உள்ளிருப்பு போராட்டம் ...
இதைத் தொடா்ந்து மாநகராட்சி 3 ஆவது வாா்டு உறுப்பினா் அருள்சபிதாரெக்ஸலின் பேசும்போது, எனது வாா்டு பகுதியில் திட்டப்பணிகள் நடைபெறும்போது, அதை ஆய்வு செய்யச் சென்றால் ஒப்பந்ததாரா்கள் தரக்குறைவாக பேசுகின்றனா்.
அந்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறேன் என்று கூறி அவா் கூட்ட அரங்கின் மையப்பகுதியில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரை மேயா், அதிகாரிகள் சமாதானப்படுத்தினா்.
இதைத்தொடா்ந்து, உறுப்பினா்கள் பேசியதாவது:
நாகா்கோவில் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளதால், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முக்கடல் அணையை தூா்வார வேண்டும்.
48 ஆவது வாா்டு பகுதியில், முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை. . குடிநீா் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்துள்ள போா்வெல்களை சீரமைக்க வேண்டும். எரியாத இடங்களில் தெரு விளக்குகளை பொருத்தவேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். பல்வேறு இடங்களில் குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகிறது. அதை சீரமைத்தாலே குடிநீா் விநியோக பிரச்னை தீா்ந்து விடும். நாய்களை பிடித்து உரிய முறையில் கருத்தடை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்த போராட்டம் ...
கூட்டம் நிறைவடைந்த பின்னா் உறுப்பினா் அருள்சபிதாரெக்ஸலின் தனது கோரிக்கையை வலியுறுத்தி கூட்ட அரங்கில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடா்ந்தாா். அவருக்கு ஆதரவாக, உறுப்பினா்கள் நவீன்குமாா், உதயகுமாா் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து
மேயா் மேரிபிரின்சிலதா, பொறியாளா் ரகுராம் ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மாலை 4 மணிக்கு
போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், மண்டல தலைவா்கள் முத்துராமன், ஜவஹா், அகஸ்டினாகோகிலவாணி, செல்வகுமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.











