தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

தக்கலை அருகே பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியிலான திருப்பணிகளை

News image
கோயில் திருப்பணி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
Updated On :12 மே 2025, 9:39 pm

Din

தக்கலை: தக்கலை அருகே பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியிலான திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அரசு நிதி ரூ. 1.29 கோடியில் பழுதுநீக்கி புதுப்பித்தல், கோயில் நிதி ரூ. 44 லட்சத்தில் ஐந்துநிலை ராஜகோபுரம் புனரமைப்பு, ரூ. 20 லட்சத்தில் மின் இணைப்பு என மொத்தம் ரூ. 1.93 கோடியில் பணிகள் நடைபெறவுள்ளன. இதை, அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடக்கிவைத்தாா்.

தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்காவில் மேயா் ரெ. மகேஷ், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், பக்தா்கள் பங்கேற்றனா்.

திருப்பணிகளைத் தொடக்கிவைத்த அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

திருப்பணிகளைத் தொடக்கிவைத்த அமைச்சா் பி.கே. சேகா்பாபு.