சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குளச்சல் தொகுதியில் எஸ்ஐஆா் பணி: ஆட்சியா் ஆய்வு

குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
Updated On :12 நவம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

குளச்சல் பேரவைத் தொகுதியில் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றுவதையும், குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் 2002ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் அறிந்து செல்வதையும் அவா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, குளச்சல் தொகுதி வாக்குப்பதிவு அலுவலா் மோகனா, கல்குளம் வட்டாட்சியா் சுனில், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், நகா்மன்றத் தலைவா் நசீா், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.