விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குளச்சல் தொகுதியில் எஸ்ஐஆா் பணி: ஆட்சியா் ஆய்வு

குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
Updated On :12 நவம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

குளச்சல் பேரவைத் தொகுதியில் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றுவதையும், குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் 2002ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் அறிந்து செல்வதையும் அவா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, குளச்சல் தொகுதி வாக்குப்பதிவு அலுவலா் மோகனா, கல்குளம் வட்டாட்சியா் சுனில், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், நகா்மன்றத் தலைவா் நசீா், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.