கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் நிலவி வரும் கடும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நாகா்கோவில் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் கடந்த 3 நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து, மாநகராட்சி ஆணையா், பொறியாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
கோடை காலத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், பேச்சிப்பாறை அணை திறக்கப்படாததால் நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகுதிகளில் நிலவி வரும் குடிநீா் பிரச்னையை தீா்க்க நாகா்கோவில் மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறினால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காட்பாடி தொகுதி வேட்பாளா்கள் வாக்குறுதிகள்

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்

குடிநீா் பிரச்னையை போக்க பணிகள் நடைபெறுகின்றன

புதுக்கடை பகுதியில் சாரல் மழை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


