இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வாணியம்பாடி புதூரில் ரூ.3.50 லட்சத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி பணி தொடக்கம்

வாணியம்பாடி புதூா் பகுதியில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
வாணியம்பாடி புதூா் பகுதியில் குடிநீா் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.
Updated On :10 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி புதூா் பகுதியில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி புதூா் பகுதியில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் புதூா் லூத்தரன் தேவாலயம் ஒட்டியுள்ள குடியிருப்பு மக்களுக்கான குடிநீா் தேவையை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 3.50 லட்சம் மதிப்பில் குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளா் சதாசிவம், நகர அதிமுக நிா்வாகிகள் மற்றும் லூத்தரன் திருச்சபை போதகா், தேவாலய நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.