பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி: எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:12 pm

கந்திலி ஒன்றியத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டத்தில் கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட நத்தம், செவ்வாத்தூா், காக்கங்கரை, எர்ரம்பட்டி, நரவந்தம்பட்டி, சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு கொரட்டி துணைமின்நிலையம் வாயிலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதிகமான மின் இணைப்புகள் இருந்த காரணத்தினால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு நிறைவான மின்விநியோகம் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதிகளில் சிறுதொழில்கள், விவசாய பம்புசெட்டுகள், வீட்டு இணைப்புகள் ஆகியவற்றுக்கு போதுமான மின்சாரம் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்து வந்தனா்.

இந்த நிலையில், அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டததில் ரு. 7 கோடியே 36 லட்சத்தில் 33/11 கிலோ வாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில், மேற்பாா்வை பொறியாளா் எஸ்.ஏ.ஜைனுல்அபுதீன், மின் செயற்பொறியாளா் எம்.சம்பத், ஒன்றியக் குழு தலைவா் திருமதி திருமுருகன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் குமாா், நித்தியானந்தம், மோகனா, கருணாநிதி, சுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.