குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வேப்பூா் மணிமுக்தாற்றில் ரூ.12 கோடியில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி: விருத்தாசலம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா்

News image

வேப்பூரை அடுத்துள்ள மணிமுக்தாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :10 மார்ச் 2026, 2:20 am IST

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், தண்ணீா் கரைபுரண்டு ஓடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பெருமளவிலான விவசாய நிலங்களும் சேதமடைந்து வந்தன. இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மணிமுக்தாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்று இலங்கியனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தடுப்புச்சுவா் கட்டுவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டது. தொடா்ந்து, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு உதவிச் செயற்பொறியாளா் பிரசன்னா, உதவிப் பொறியாளா் சுதா்சன் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா். மேலும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வட்டாரத் தலைவா் செல்வ ஆனந்த், நிா்வாகிகள் சின்னதுரை, ஆறுமுகம், கந்தசாமி, லெனின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.