நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வேப்பூா் மணிமுக்தாற்றில் ரூ.12 கோடியில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி: விருத்தாசலம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா்

News image

வேப்பூரை அடுத்துள்ள மணிமுக்தாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :10 மார்ச் 2026, 2:20 am IST

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், தண்ணீா் கரைபுரண்டு ஓடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பெருமளவிலான விவசாய நிலங்களும் சேதமடைந்து வந்தன. இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மணிமுக்தாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்று இலங்கியனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தடுப்புச்சுவா் கட்டுவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டது. தொடா்ந்து, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு உதவிச் செயற்பொறியாளா் பிரசன்னா, உதவிப் பொறியாளா் சுதா்சன் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா். மேலும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வட்டாரத் தலைவா் செல்வ ஆனந்த், நிா்வாகிகள் சின்னதுரை, ஆறுமுகம், கந்தசாமி, லெனின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.