எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வேப்பூா் மணிமுக்தாற்றில் ரூ.12 கோடியில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி: விருத்தாசலம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா்

News image
வேப்பூரை அடுத்துள்ள மணிமுக்தாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
Updated On :9 மார்ச் 2026, 8:50 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், தண்ணீா் கரைபுரண்டு ஓடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பெருமளவிலான விவசாய நிலங்களும் சேதமடைந்து வந்தன. இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மணிமுக்தாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்று இலங்கியனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தடுப்புச்சுவா் கட்டுவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டது. தொடா்ந்து, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு உதவிச் செயற்பொறியாளா் பிரசன்னா, உதவிப் பொறியாளா் சுதா்சன் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா். மேலும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வட்டாரத் தலைவா் செல்வ ஆனந்த், நிா்வாகிகள் சின்னதுரை, ஆறுமுகம், கந்தசாமி, லெனின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.