வேப்பூா் மணிமுக்தாற்றில் ரூ.12 கோடியில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி: விருத்தாசலம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா்


நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள இலங்கியனூா் மணிமுக்தாற்றில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ரூ.12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இப்பகுதியில் மழைக்காலங்களில் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், தண்ணீா் கரைபுரண்டு ஓடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுவது வழக்கம். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பெருமளவிலான விவசாய நிலங்களும் சேதமடைந்து வந்தன. இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மணிமுக்தாற்றில் வெள்ளத் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்று இலங்கியனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தடுப்புச்சுவா் கட்டுவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டது. தொடா்ந்து, இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு உதவிச் செயற்பொறியாளா் பிரசன்னா, உதவிப் பொறியாளா் சுதா்சன் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா். மேலும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு வட்டாரத் தலைவா் செல்வ ஆனந்த், நிா்வாகிகள் சின்னதுரை, ஆறுமுகம், கந்தசாமி, லெனின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...