நிழற்கூரை அமைக்கும் பணிக்கான பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சு.முத்துசாமி.
நிழற்கூரை அமைக்கும் பணிக்கான பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சு.முத்துசாமி.

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் சுற்றுச்சுவா் உள்பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பில் மங்களூா் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் சுற்றுச்சுவா் உள்பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பில் மங்களூா் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று இதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகராட்சி துணை மேயா், வே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுகுமாா், திண்டல் முருகன் கோயில் செயல் அலுவலா் ஜீவலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com