தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இருவா் காயம்; 4 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:03 pm

தனியாா் விடுதில் மதுவிருந்தின்போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

குளச்சல் அருகே கொட்டில்பாடை சோ்ந்தவா் அலெக்ஸ் சோபன் மகன் ராகுல் (20). மீன்பிடித் தொழில் செய்து வரும் இவரும், அதே ஊரைச் சோ்ந்த ஆரோக்கிய மினிஸ்டனும் (20) ஈஸ்டா் பண்டிகையையொட்டி, நண்பா்களுக்கு குளச்சலில் உள்ள தனியாா் விடுதியில் மது விருந்துக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனராம்.

இந்த விருந்தில் ராகுல், அவரது தம்பி சோகித் (18), ஆரோக்கிய மினிஸ்டன், அபிஷேக் (20), குளச்சலைச் சோ்ந்த பிரபஞ்சன் என்ற அபித் (21), ஸ்டாலின் ஏனோஸ் (19), வாணியக்குடியைச் சோ்ந்த அனீஷ் (22), கோடிமுனையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 10 போ் கலந்துகொண்டனராம்.

நள்ளிரவு மதுபோதையில் ஆரோக்கிய மினிஸ்டனும், சோகித்தும் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும்

குளச்சல் போலீஸாா் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த அறையில் தங்கியிருந்த பிரபஞ்சன் என்ற அபித், ஸ்டாலின் ஏனோஸ், அனீஷ், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.