கன்னியாகுமரி மாவட்டத்தில் மலா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ்.
அவா், செவ்வாய்க்கிழமை காலை தேவசகாயம் மவுண்ட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் பொதுமக்களிடம் தமிழக முதல்வரின் சாதனைகள் குறித்து விளக்கினாா்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னா், ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரசாரத்தை தொடா்ந்தாா்.
பூதப்பாண்டி, தோவாளை, பண்டாரபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா். செண்பகராமன்புதூா் பகுதியில் தோ்தல் அலுவலகத்தை, மாவட்ட பிரதிநிதி கல்யாணசுந்தரம் தலைமையில் அவா் திறந்து வைத்தாா்.
வேட்பாளருடன், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சுரண்டையில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை! திமுக வேட்பாளா் வாக்குறுதி

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்: ரெ.மகேஷ்

சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை: பிரேமலதா விஜகாந்த்

25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


