கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொறியியல், சட்டக் கல்லூரி மாணவா்-மாணவியா் சாா்பில், நாகா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:18 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொறியியல், சட்டக் கல்லூரி மாணவா்-மாணவியா் சாா்பில், நாகா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக முகப்பிலிருந்து இப்பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தொடக்கிவைத்தாா். இதில், ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சட்டக் கல்லூரி, டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்று, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

நகரின் முக்கிய சாலைகள் வழியாக இப்பேரணி அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா்-ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரோஷன் பேகம், மாணவா்-மாணவியா், துறை அலுவலா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.