கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொறியியல், சட்டக் கல்லூரி மாணவா்-மாணவியா் சாா்பில், நாகா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக முகப்பிலிருந்து இப்பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தொடக்கிவைத்தாா். இதில், ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சட்டக் கல்லூரி, டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்று, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.
நகரின் முக்கிய சாலைகள் வழியாக இப்பேரணி அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா்-ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரோஷன் பேகம், மாணவா்-மாணவியா், துறை அலுவலா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



