தோவாளை வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அம்பேத்கா், காமராஜா், வேலப்பன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். பிரசாரத்தில் அவா் பேசியது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரியை முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதுதான் எனது லட்சியம். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியின் சுற்றுலா வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றாா் அவா். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கீழப்பாவூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணியில் திமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்



