திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

நடைக்காவு, வாவறை ஊராட்சிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

நடைக்காவு சந்திப்பில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:50 am IST

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை, ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாா்ஷல் நேசமணி சிலை ஆகியவை அருகிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். மாநிலப் பொதுச் செயலா் பால்ராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், முன்சிறை வட்டாரத் தலைவா் விஜயகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா பாய், விஜயமோகனன், முன்சிறை ஒன்றிய தேமுதிக செயலா் என். தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி துரைராஜ், திரளானோா் பங்கேற்றனா்.

சாத்தன்கோடு, வேங்குழி, மணலி, பாத்திமாநகா், மாடந்தறை, பாரப்பட்டுவிளை, ஆலங்கோடு, பெரியவிளை, புதுக்குளம், குழிச்சாணி, வாவறை, ஆறுதேசம், மங்காடு, பணமுகம், விரிவிளை பகுதிகளிலும், கொல்லங்கோடு நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.