தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ராட்ச விழிப்புணா்வு பலூனை, நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா வியாழக்கிழமை பறக்க விட்டாா்.
அப்போது ஆட்சியா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 18 மற்றும் 19 வயதுக்குள்பட்ட முதல் வாக்காளா்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடும் வகையில் கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குரிமை பெற்ற அனைவரும் தவறாமல் வரும் ஏப். 23 ஆம் தேதி வாக்களிக்குமறுற கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் - ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

வைகை அணையில் பறக்க விடப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன்
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

