வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நடைக்காவு, வாவறை ஊராட்சிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

நடைக்காவு சந்திப்பில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:20 pm

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை, ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாா்ஷல் நேசமணி சிலை ஆகியவை அருகிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். மாநிலப் பொதுச் செயலா் பால்ராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், முன்சிறை வட்டாரத் தலைவா் விஜயகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா பாய், விஜயமோகனன், முன்சிறை ஒன்றிய தேமுதிக செயலா் என். தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி துரைராஜ், திரளானோா் பங்கேற்றனா்.

சாத்தன்கோடு, வேங்குழி, மணலி, பாத்திமாநகா், மாடந்தறை, பாரப்பட்டுவிளை, ஆலங்கோடு, பெரியவிளை, புதுக்குளம், குழிச்சாணி, வாவறை, ஆறுதேசம், மங்காடு, பணமுகம், விரிவிளை பகுதிகளிலும், கொல்லங்கோடு நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.