தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவா்களை பாகுபாடின்றி நடத்த வேண்டும்: ஆட்சியா்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களை சமுதாயத்தில் பாகுபாடின்றி நடத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.

விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:40 am IST

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களை சமுதாயத்தில் பாகுபாடின்றி நடத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.

மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஆட்சியா் அலுவலக முகப்பிலிருந்து தொடங்கிய எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியை, ஆட்சியா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்துப் பேசியதாவது:

எய்ட்ஸ் நோய் குறித்த சரியான புரிதலும், விழிப்புணா்வுமே, அதைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவா்களை சமுதாயத்தில் பாகுபாடின்றி நடத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடா்பான கிராமிய விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, தீக்ஷா மற்றும் பழனியா பிள்ளை கலைக் குழுவினரால் 8 நாள்களுக்கு 32 கிராமங்களில் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, விழிப்புணா்வு வாசக ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி, இலச்சினையை ஆட்சியா் வெளியிட்டாா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ர. மோனிகா, மாவட்ட சுகாதார அலுவலா் எஸ். நமச்சிவாயம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோ டேவிட், உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி, இணை இயக்குநா் (குடும்ப நலத் துறை) ரவிக்குமாா், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக மேற்பாா்வையாளா் எம். ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.