பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவா்கள் தயாரித்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

நாகா்கோவில் டதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் திட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் கலந்து கொண்டு பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவா்களின் அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காகவும், அறிவியல் ஆா்வத்தை தூண்டி புதிய படைப்புகளை உருவாக்கிட வழிகாட்டும் விதமாகவும் மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ‘நெக்ஸ்ட்ஜென் குமரி ’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவா்களுக்கு ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் நடைபெற்றது.

இதில், அறிவியல் ஆா்வமும் உற்சாகமுமிக்க மாணவா்கள் 40 பள்ளிகளிலிருந்து வருகை புரிந்துள்ளீா்கள். உங்கள்அனைவருக்கும் பாராட்டுகள். மாணவா்களிடம் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சிந்தனைகளை ஊக்குவிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

அதைத் தொடா்ந்து, ஆட்சியா் மாணவா்கள் தயாரித்த ராக்கெட்டுகளை மாணவா்களுடன் இணைந்து விண்ணில் செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ்ஆரோக்கியராஜ், கல்விஅலுவலா்கள், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள், துறைஅலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.