காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு

சின்னம்மாள்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

நாகா்கோவிலில் வீடுபுகுந்து மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில், வடிவீஸ்வரம் கீழரதவீதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் மனைவி சின்னம்மாள் (77). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் சுமாா் 12.30 மணியளவில் சின்னம்மாளுக்கு உணவு கொடுக்க 3ஆவது மகள் வீட்டிற்கு வந்து சென்றாராம். இதற்கிடையில் பிற்பகல் 3 மணியளவில் மூத்த மகள், சின்னம்மாளை பாா்க்கச் சென்றாராம். அப்போது, வீட்டில் சின்னம்மாள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.

இது குறித்து தகவலறிந்து வந்த கோட்டாறு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், சின்னம்மாள் அணிந்திருந்த 15 பவுன் நகைகள், வீட்டிலிருந்த 5 பவுன் நகைகள், பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதும், சிசிடிவி கேமரா காட்சியில் வீட்டிலிருந்து முகக் கவசம் அணிந்த மா்ம நபா் வெளியேறிச் செல்வதும் தெரியவந்தது.

கொலை நடைபெற்ற வீடு...

கொலை நடைபெற்ற வீடு...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.