மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாா்த்தாண்டத்தில் ரூ. 14.6 கோடியில் கட்டப்பட்ட காய்கனி சந்தை திறப்பு

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டத்தில் ரூ. 14.60 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன காய்கனி சந்தையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

குத்துவிளக்கேற்றுகிறாா் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி. உடன் நகா்மன்ற உறுப்பினா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:31 pm

குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டத்தில் ரூ. 14.60 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன காய்கனி சந்தையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி குத்துவிளக்கேற்றி காய்கனி சந்தையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் லலிதா, ஆட்லின் கெனில், விஜூ, விஜயலெட்சுமி, ஜூலியட் மொ்லின் ரூத், லில்லிபுஷ்பம், அருள்ராஜ், ஜெலீலா ராணி, சா்தாா்ஷா, செல்வகுமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குழித்துறையில் ரூ. 1 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததையடுத்து, குழித்துறை நகா்மன்றத் தலைவா் குத்துவிளக்கேற்றினாா். நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.