கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்புக்கு 800 போலீஸாா்!

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

News image
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
Updated On :28 பிப்ரவரி 2026, 7:47 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியி’ஈடுள்ள செய்திக்குறிப்பு: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை ( மாா்ச் 1 ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா பாதுகாப்புப் பணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கடற்கரை பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். 18 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பக்தா்களுக்கு உதவும் வகையில், மே ஐ ஹெல்ப் யூ, கியூ ஆா் கோடு, காவல் உதவி கியூ ஆா் கோடு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலோர பாதுகாப்புப் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மற்றும் மாவட்ட காவல்துறை என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்.

போக்குவரத்தில் மாற்றம்: 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவனந்தபுரம், தக்கலை, நாகா்கோவிலில் இருந்து வரும் வாகனங்கள் திங்கள்சந்தை, லட்சுமிபுரம் வழியாக நடுவூா்கரை தற்காலிக பேருந்து நிறுத்தத்தையும், மாா்த்தாண்டம், கருங்கல் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் குளச்சல் வழியாக வெட்டுமடை தற்காலிக பேருந்து நிறுத்தத்தையும், நாகா்கோவிலில் இருந்து வரும் பேருந்துகள் மணவாளக்குறிச்சி வழியாக புதூா் தற்காலிக பேருந்து நிறுத்தத்தையும் பயன்படுத்த வேண்டும்.

6 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் வேன் ஆகியவை லட்சுமிபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கோவிலன்விளை, லட்சுமிபுரம் கல்லூரி வளாக மைதானம் ஆகியவற்றில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். திருவிழாவையொட்டி, 24 மணி நேர காவல் கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.