நடுவூா்க்கரை கோயிலில் கால்நாட்டு விழா

நடுவூா்க்கரை கோயிலில் கால்நாட்டு விழா

Published on

மண்டைக்காடு, நடுவூா்க்கரை, சிவசக்தி கோயில் பங்குனித் திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா வரும் மாா்ச் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 31ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும். இதற்கான கால்நாட்டு விழாவிற்காக வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலின் தலைமை அா்ச்சகா் முருகன், கோயில் தந்திரி ராஜேஷ் போற்றி, கோயில் நிா்வாகத்தினா் முன்னிலையில் பந்தல் கால்நாட்டு விழா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com