மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாகா்கோவிலில் இளம்பெண் தற்கொலை

நாகா்கோவிலில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

நாகா்கோவிலில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவில், கோட்டாறு, வாகையடி தெருவைச் சோ்ந்த செந்தில், நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சந்தியா (25). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது, ஒரு குழந்தை உள்ளது.

இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதே போல், புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சந்தியா நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து செந்தில், கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் வந்து சந்தியாவின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].