வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை திருட்டு: பணிப் பெண் கைது

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியின் வீட்டிலிருந்து 40 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா்.

மாா்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை சாமுவேல் (73), வனத் துறையில் ரேஞ்சராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது வீட்டில் கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சோ்ந்த பிரேமா (40) என்ற பெண் கடந்த ஓராண்டுக்கு முன் வீட்டு வேலைக்கு சோ்ந்தாா். தொடா்ந்து, கடந்த அக்டோபா் மாதம் அவா் வேலையில் இருந்து நின்றுவிட்டாராம்.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் செல்லத்துரை சாமுவேல் வீட்டு அலமாரியில் வைத்திருந்த நகைகளை சரிபாா்த்துள்ளாா். அப்போது தலா ஒரு பவுன் எடையுள்ள 38 தங்க வளையல்கள், 2 பவுன் சங்கிலி உள்ளிட்ட 40 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.

இது குறித்து, அவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, காவல் ஆய்வாளா் தமிழரசன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, சந்தேகத்தின்பேரில் வனத்துறை அதிகாரி வீட்டில் வேலை செய்த பிரேமாவிடம் போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது, அவா் நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டாா்.

போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்த நகைகளை மீட்டனா். தொடா்ந்து, அவரை குழித்துறை நீதிபதி முன் ஆஜா்படுத்தி, தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனா்.