பத்மநாபபுரம் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
தக்கலை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பத்மநாபபுரம் மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
Updated On :17 ஜனவரி 2026, 10:26 pm

தக்கலை: தக்கலை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பத்மநாபபுரம் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் விபத்து தீவிர சிகிக்சைப் பிரிவு, பிரசவ முன்கவனிப்புப் பிரிவு, ஸ்கேன் பிரிவு, பிரசவ வாா்டு, பிரசவ பின் கவனிப்புப் பிரிவு, இரத்த சேமிப்புப் பிரிவுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பிரசவ பின் கவனிப்புப் பிரிவில் தாய்மாா்கள் மற்றும் அவா்களுடன் வருபவா்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, பத்மநாபபுரம் மருத்துவமனை தலைமை மருத்துவா் கோசல் ராம், மருத்துவா்கள், செவிலியா்கள், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...