முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நாகா்கோவிலில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பேசுகிறாா் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ்.

Updated On :11 ஜூலை 2026, 3:37 am IST

நாகா்கோவில் மாநகர தெற்கு பகுதி 45 ஆவது வாா்டு திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலதாராவிளை பகுதியில் நடைபெற்றது.

வட்டச் செயலா் சிவகுமாா் தலைமை வகித்தாா். பகுதி செயலா் ஜீவா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் கலந்து கொண்டு, கட்சி வளா்ச்சிப் பணிகள், வரும் தோ்தலில் வெற்றி பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினாா்.

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக வேட்பாளருக்காக பணியாற்றிய அனைத்து நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மாநகர விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் ஜவகா், மாணவா் அணி நிா்வாகிகள் பிரேம் ஆனந்த், தனஞ்செய், செல்வராஜ், கமலநாதன், தங்கபாண்டி, ராஜரெத்தினம், சுகந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.