20 திருநங்கைகளுக்கு வீடு கட்டும் பணிக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிடம் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, செவ்வாய்க்கிழமை 20 திருநங்கைகளுடன் சென்று ஆட்சியரிடம் அளித்த மனு: கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட தோவாளை ஒன்றியம், சகாயநகா் ஊராட்சி, வீரமாா்த்தாண்டன்புதூரில் 20 திருநங்கைகளுக்கு ஊரக வளா்ச்சி- ஊராட்சித் துறை சாா்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்கு, கடந்த பிப். 20இல் ஆட்சியரால் உத்தரவு வழங்கப்பட்டது.
அதன்பேரில், திருநங்கைகள் வீடு கட்டும் பணியைத் தொடங்கினா். ஆனால், முதல்கட்ட நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால், அவா்கள் சிரமப்படுகின்றனா். மேலும், வீடுகளுக்கு குடிநீா், மின்சாரம், போக்குவரத்து சிறுபாலம் போன்ற வசதிகள் செய்யப்படவில்லை. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், திருநங்கையரின் வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதுடன், கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல சிறுபாலம் அமைத்துக் கொடுத்து பணிகளை நிறைவேற்றவும், முதல்கட்ட நிதியை விரைந்து வழங்கவும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், மின்துறை கண்காணிப்புப் பொறியாளருக்கு அறிவுறுத்தினாா்.
அதிமுக நிா்வாகிகள் ஜெயகோபால், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

கலைஞா் வீடு திட்ட பயனாளிகளுக்கு நிலுவைத்தொகை விடுவிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 2 தோ்ச்சி: எம்எல்ஏ வாழ்த்து






