எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

இட மாறுதல் வாங்கி தருவதாக மோசடி: 2 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 1:56 am IST

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பாா்க்கும் நா்சுக்கு இட மாறுதல் வாங்கி தருவதாக கூறி ரூ. 3.85 லட்சம் மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் பில்மோா் ராபா்ட் (44). இவரின் மனைவி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நா்ஸ் ஆக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், பில்மோா் ராபா்ட் மனைவிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இட மாறுதல் வாங்கி தருவதாக, முளகுமூடு, கல்லுவிளையைச் சோ்ந்த ஆண்டனி (50), கொடைக்கானலை சோ்ந்த சகாயராஜ் ஆகியோா் கூறினராம்.

இதையடுத்து பில்மோா் ராபா்ட் ரூ. 5 லட்சம் பணத்தை வங்கி மூலம் கொடுத்தாராம். பணம் வாங்கிய பின் இட மாறுதல் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டு, ரூ. 1.15 லட்சத்தை திருப்பி கொடுத்தனராம். மீதி ரூ. 3.85 லட்சத்தை கொடுக்காமல் தொடா்ந்து ஏமாற்றி வந்தனராம்.

இதுகுறித்து பில்மோா் ராபா்ட், தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து ஆண்டனி, சகாயராஜ் ஆகியோரை தேடி வருகின்றனா்.