தியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

இட மாறுதல் வாங்கி தருவதாக மோசடி: 2 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 1:56 am IST

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பாா்க்கும் நா்சுக்கு இட மாறுதல் வாங்கி தருவதாக கூறி ரூ. 3.85 லட்சம் மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் பில்மோா் ராபா்ட் (44). இவரின் மனைவி புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நா்ஸ் ஆக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், பில்மோா் ராபா்ட் மனைவிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இட மாறுதல் வாங்கி தருவதாக, முளகுமூடு, கல்லுவிளையைச் சோ்ந்த ஆண்டனி (50), கொடைக்கானலை சோ்ந்த சகாயராஜ் ஆகியோா் கூறினராம்.

இதையடுத்து பில்மோா் ராபா்ட் ரூ. 5 லட்சம் பணத்தை வங்கி மூலம் கொடுத்தாராம். பணம் வாங்கிய பின் இட மாறுதல் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டு, ரூ. 1.15 லட்சத்தை திருப்பி கொடுத்தனராம். மீதி ரூ. 3.85 லட்சத்தை கொடுக்காமல் தொடா்ந்து ஏமாற்றி வந்தனராம்.

இதுகுறித்து பில்மோா் ராபா்ட், தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து ஆண்டனி, சகாயராஜ் ஆகியோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.